Sunday 2 October 2011

1. திருநெல்வேலி மாநகராட்சி உறுப்பினர்களுக்கு


மேலப்பாளையத்தில் தெருவில் ரோடு போடுகிறோம் என்று சொல்லி மழை தண்ணீர் தங்காத வகையில் முழுவதுமாக தாரை மெழுகி விட்டார்கள் . 

இதை மாநகராட்சி உறுப்பினர்களோ அல்லது மக்களோ அல்லது மக்களின் தலைவர்களோ கண்டு கொள்ளவில்லை . 

விளைவு :  மேலப்பாளையத்தில் நிலத்தடி நீர் இல்லாமல் போகி விட்டது. 

இதற்கு யார் காரணம்? திட்டமிடப்பட்டு இது செய்யப்பட்டதா?!. 

புதிதாக வரப்போகும்

 மாநகராட்சி உறுப்பினர் களுக்கு
 ஓர் வேண்டுகோள்: 

தாங்கள் மக்களின் நலன் கருதி பழைய ரோட்டை கிளறி தண்ணீர் தேங்கும் வகையில் மீண்டும் ரோடு போட்டால் இருக்கும் தலைமுறை, வரும் தலை முறை உங்களை வாழ்த்தும்! 







மேலப்பாளையத்தில் தெரு பெயர்கள் 
எழுத பட வேண்டும். 

இதை எல்லா ஊரிலும் 
மாநகராட்சி நிர்வாகமே செய்கிறது.

மேலப்பாளையத்திற்கு மட்டும் திருநெல்வேலி மாநகராட்சி ஏன் செய்ய வில்லை என்று தெரியவில்லை என மேலப்பாளையம் மக்கள் கேட்கிறார்கள்.




பெண்களின் இரவு தூக்கத்தை கலைக்கும் குடிநீர். 


ஆம். மேலப்பாளையத்தில் மாநகராட்சி வழங்கும் குடிநீர் பிடிக்க நிறைய தெருக்களில் பெண்கள் தங்களின் இரவு தூக்கத்தை தொலைத்து விடியற்காலை 3 மணிக்கு முழித்து தண்ணீர் பிடிக்கிறார்கள். 


ஏன் குடிநீர் வாரியம் தண்ணீர் பகலில் விடக்கூடாதா மேலப்பாளையம் மக்களுக்கு ? 


நிறைய தெருக்களில் தண்ணீர் வருவதில்லை. மாநகராட்சி உறுப்பினர்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் ? தொகுதி உறுப்பினர் என்ன செய்து கொண்டு இருக்கிறார் ? என்று தெரிவதில்லை என்று மேலப்பாளையம் பெண்கள் புலம்புகிறார்கள்.


மக்களின் கஷ்டங்களை புரிந்து அவர்களுக்கு உள்ள உரிமைகளை பெற்று தருவதற்காக வரும் மாநகராட்சி உறுப்பினர் பதவிக்கு தகுதியான ஆட்களை மக்கள் தேர்ந்தெடுப்பார்களா? பொறுந்திருந்து பார்ப்போம்.  


பதிவு : அப்துல் நாசர்,
செயற்குழு உறுப்பினர், 
மேலப்பாளையம் வளர்ச்சி அறக்கட்டளை,
 மேலப்பாளையம்.